எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு சாதனைகளை அனுப்ப ரஷ்யா நடவடிக்கை!

<!–

எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு சாதனைகளை அனுப்ப ரஷ்யா நடவடிக்கை! – Athavan News

ரஷ்யாவின் எஸ் 400 ரக ஏவுகணை தடுப்பு சாதனைகளை இந்த வருட இறுதிக்குள் இந்தியாவிற்கு அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

அடுத்த மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார். இதனையொட்டி அடுத்த மாதத்தின் இறுதிக்குள் ஏவுகணை தடுப்பு சாதனைகளை அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய விமானப்படையின் இரண்டு குழுக்களுக்கு ரஷ்யா பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply