2,500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்ய தீர்மானம்!

பால்மாவிற்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டை தொடர்ந்து உள்ளூர் பால் உற்பத்தியை விஸ்தரிக்கும் நோக்கில் 2,500 கறவைப் பசுக்களை இறக்குமதி செய்யவுள்ளதாக கால்நடை வளங்கள், பண்ணைகள் மேம்பாடு, பால் மற்றும் முட்டை சார்ந்த கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சர் டீ.பிஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும், கறவைப் பசுக்களின் இறக்குமதிகளுக்காக 4 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கண்டி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் தலா 02 காணிகள் வீதம் 4 காணிகள் இதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

கறவைப் பசுக்களை பராமரிக்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து விடயங்களும் அரசாங்கத்தால் மாத்திரமே மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் தனக்கும் இடையில் எவ்வித மோதல்களும் ஏற்படவில்லை! கெஹெலிய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *