அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ 7 மணி நேர வாக்கு மூலத்தை வழங்கிய பின் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகமாறு விடுக்கப்பட்ட அழைப்பையடுத்து, அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ இன்று காலை 10 மணிக்கு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து சம்பந்தமாக தேசிய புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலே செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






