புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் தேர்தல்!

புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த பின்னர் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இதனை கூறினார்.

மாகாண சபைத் தேர்தலை தற்போது நடத்துவதற்கு சாத்தியமில்லை என குறிப்பிட்ட அமைச்சர், தேர்தலில் வெற்றிபெறுவது யார் என்று அப்போது பார்ப்போம் என்றும் சவால் விடுத்தார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சியை அழித்து, நாடாளுமன்றத்தில் ஒரு ஆசனத்தைக் கூட வெல்ல முடியாத பலவீனமான கட்சியாக மாற்றியதற்கும் நீங்கள் பொறுப்பு என்றும் அவர் சாடினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *