நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடர் : மெட்வெடேவ் – ஸ்வெரேவ் பலப்பரீட்சை

நிட்டோ ஏ.டி.பி. பைனல்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு தற்போது விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

கடந்த 14 ஆம் திகதி ஆரம்பமான இத்தொடரில் பச்சை, சிவப்பு என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு 8வீர்களுக்கு வீர்களுக்கு தலா இரண்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.

ஏற்கனவே அலெக்சாண்டர் ஸ்வெரேவ், டேனியல் மெட்வெடேவ், நோவக் ஜோகோவிச் மற்றும் அண்ட்ரி ரூப்லெவ் ஆகியோர் தமது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது போட்டியில் டேனியல் மெட்வெடேவ் மற்றும் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *