இலங்கையிடம் பிரித்தானியா விடுத்துள்ள கோரிக்கை

கொழும்பு, ஓக 23

பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தமது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது மனித உரிமைகளுடன் முரணானதாக உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளில் அதிகாரிகள் நிற்க வேண்டும் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

இதேவேளை, சமூக செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி கைது செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்து  ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் கவலை வெளியிட்டிருந்தது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவதற்கான நடைமுறை தடை தொடர்பில் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய தகவல்களையும் தமது அலுவலகம் அவதானிப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கை அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *