இடியுடன் கூடிய மழை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் மழை பெய்யவுள்ள மாகாணங்கள் குறித்து வளிமண்டளவியல் திணைக்களம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

அந்தவகையில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் குருநாகல், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட சிலஇடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கபடுவதாகவும் அறிவித்துள்ளது.

அதேவேளை, ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *