ஹல் சமீரா அதிரடியாக கைது !

நாடளாவிய ரீதியில் பல குற்றச்செயல்களை புரிந்த ஹல் சமீர என்றழைக்கப்படும் வர்ணகுலசூரிய கிறிஸ்டெபுகே சமீர சம்பத் பெர்னாண்டோ, துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை, மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெசல்கொடுவ, பட்டதுவன, இல. 64/6 இல் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று (22ஆம் திகதி) இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேக நபர் நாடளாவிய ரீதியில் உள்ள அரிசி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாரியளவில் அரிசியை சேகரித்து அதற்கு பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடியான அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்.

அவர் நீர்கொழும்பில் வசிக்கும் 36 வயதுடையவர் எனவும், பல சந்தர்ப்பங்களில் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டவர் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *