மாணவர்களுக்கென பாதுகாப்புக் கடவை: வலி.மேற்கு பிரதேச சபை நடவடிக்கை!

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு சைக்கிளில் சொல்லும் மாணவர் களுக்கு சைக்கிள் விசேட கடவை அமைப்பதற்குரிய திட்டமொன்று வலி.மேற்கு பிரதேசசபையால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .

இது குறித்த கலந்துரையாடல் வலி.மேற்கு பிரதேசசபையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது . இதன்போதே பிரதேசசபை யின் தவிசாளர் த . நடனேந்திரன் இவ்வாறான திட்டத்தை முன் வைத்தார் .

பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களில் நடந்து செல் வோரும் சைக்கிளில் செல்வோரும் பாதசாரிக்கடவையூடாகக் கடக்கின்றபோது நெரிசலுக்குட்பட்டு சில விபத்துச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன .இவ்வாறு ஏற்படும் விபத்துச் சம்பவங்களைத் தடுக்கும் முகமாக பிரதான வீதியிலுள்ள பாடசாலைகளின் எல்லையருகே கொங்கிறீற்றிலான கூம்புகளை அமைத்து ( சிறப்புப் பாதுகாப்புக் கடவை ) சைக்கிளில் வரும் மாணவர்கள் அதனூடாக பாட சாலைக்குள் செல்ல முடியும் என்ற யோசனை முன்வைக்க ப்பட்டு கலந்துரையாடப்பட்டது .

அத்துடன் மாணவர்களின் நல னைக் கருத்திற் கொண்டு குறித்த திட்டம் சபையின் நிதியில் முன் னெடுக்கப்படவுள்ளது என்றும் இதற்கு பிரதேசசபைக்குட்பட்ட வட்டுக்கோட்டை , இளவாலை , மானிப்பாய் பொலிஸார் ஒத்து ழைப்பு வழங்கியுள்ளனர் என் றும் வலி.மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் நடனேந்திரன் தெரிவித்தார் .

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *