தவறுகளை மன்னிப்பது மனிதாபிமானம் – சனத் ஜயசூரிய!

பெரும் எண்ணிக்கையிலான போராட்டக்காரர்களை கைது செய்வதும் சிலரை பயங்கரவாத சட்டத்தின் கீழ் தடுத்து வைப்பதும் மிகவும் கவலைக்குரிய விடயம் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்திலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும், பின்நோக்கிப் பார்க்காமல், எதிர்நோக்க வேண்டிய நேரம் இது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தவறுகளை மன்னிப்பது மனிதாபிமானம் எனவும்  சனத் ஜயசூரிய கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *