மலையகத்திற்கான ரயில் சேவை பாதிப்பு

பதுளை, ஓக 23

மலையகத்திற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரொசல்ல ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டுள்ளதனால் இவ்வாறு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயில் இன்று காலை இவ்வாறு தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மலையகத்திற்கான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *