முன்னாள் ஜனாதிபதிக்கு சலுகைகள் கிடைக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணைக்குழு

கொழும்பு, ஓக 23

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அனுப்பியுள்ள கடிதத்திலே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரின் பாரியார் ஆகியோருக்கு பாதுகாப்பான முறையில் நாடு திரும்புவதற்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் இலங்கை அரசாங்கத்திடம் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *