யாழில் கடற்படை சிப்பாய் தற்கொலை!

காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய் ஒருவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

23 வயதுடைய கேகாலையை சேர்ந்த டி.பி.என்.டி. பெரேரா எனும் கடற்படை சிப்பாயே உயிரிழந்துள்ளார்.

குறித்த சிப்பாய் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *