
இன்று காலை, காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் தனது கை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிப்பாய் இவ்வாறு தனது துப்பாக்கியினால் தன்னைத் தானே சுட்டு தனது உயிரை மாய்த்ததுக்கான காரணம் தெரியவில்லை.
கேகாலை மாவட்டத்தை சொந்த இடமாக கொண்ட டி.பி.என்.டி. பெரேரா(வயது 23) எனும் கடற்படை சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிற செய்திகள்