ஜனாதிபதி மாளிகை நீச்சல் தடாகத்தில் குளித்த இருவர் சிக்கினர்

போராட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட போது, நீச்சல் குளத்தில் இறங்கி சோப்பு கலந்த நீரில் குளித்த இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சோப்பு போட்டு குளித்த ஒருவர் பதுளை பகுதியில் உள்ள தொலைதூர கிராமத்தில் வசிக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மற்றைய சந்தேக நபர் தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த இருவரையும் கைது செய்ய விசேட பொலிஸ் குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நீச்சல் தடாகத்தில் குதித்து நீரில் குளித்த காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியானதால் இலங்கை சர்வதேச அளவில் அவமானமடைந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அண்மையில் குறிப்பிட்டிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *