இறுதி தவணைக்குள் பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்க யோசனை!

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த,இத்தகவலை இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இணை அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இந்நிலையில்,2023 ஆம் ஆண்டுக்கான சீருடைத்துணி 2022 ஆம் ஆண்டு பாடசாலை இறுதித் தவணைக்கு முன்னர் இலவசமாக மாணவர்களுக்கு வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சீனக்குடியரசால் வழங்கப்படும் சீருடைத்துணிக்கு மேலதிகமான தேவையை உள்ளூர் துணி உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்து 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை சீருடைத் துணித் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *