கடலை இறக்குமதி நிறுத்தம்!

இதுவரை ஜம்போ வேர்க்கடலை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

எனினும் இப்போது இலங்கையில் ஜம்போ வேர்க்கடலை வகைக்கு மாற்று வகை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை ஜம்போ எனப்படும் மாற்று வகை கடலை இறக்குமதி செய்யப்படும் கடலையை விட தரத்தில் உயர்வானது என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே இனிமேல் கடலையை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நம் நாட்டில் நிலக்கடலையின் ஆண்டுத் தேவை 30,000 மெட்ரிக் தொன்களாகும் ஆனால் தற்போது நிலக்கடலை உற்பத்தி 64,000 மெட்ரிக் தொன்னாக அதிகரித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *