இளைஞனின் தங்கச் சங்கிலியை திருடிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

கொட்டாவ, வித்தியாலய சந்திக்கு அருகில் இளைஞர் ஒருவரிடமிருந்து தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிய குற்றச்சாட்டில் மாலபே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

மாலபே பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் (STF) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் இணைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், திருடப்பட்ட தங்கச் சங்கிலி மற்றும் கையடக்கத் தொலைபேசியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

வலஸ்முல்லை, வீரகெட்டிய பிரதேசத்தில் உள்ள தனது சகோதரியின் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (20) சென்ற இளைஞன், வீட்டுக்கு எதிரே உள்ள வீதியில் காத்திருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *