புத்த பெருமான் என்பவர் தமிழனுக்கு எதிரானவர் அல்ல. இந்து மதத்தில் பிறந்த மிகப்பெரிய மகான். புத்த பெருமானுக்கும் ,சிங்கள மொழிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. என பேராசிரியர் சிதம்பரமோகன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ;
புத்த பெருமானுக்கும் ,சிங்கள மொழிக்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. சீவகசிந்தாமணி ,சிலப்பதிகாரம்,மணிமேகலை,வளையாபதி,குண்டலகேசி ஆகிய 5 பௌத்த காப்பியங்களும் தமிழில் எழுதப்பட்டது.ஆகவே தமிழ் காவியங்கள் தான் பௌத்த மதத்தை இலங்கை போன்ற நாடுகளில் நிலை நிறுத்தியுள்ளது.
புத்த பெருமான் இந்து சமயத்தவர்.கந்தரோடை ,குருந்தூர் மலை, பொன்னாலை போன்ற பௌத்த சின்னங்கள் உள்ள இடங்களை தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுடைய சின்னம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
எவ்வாறு கிறிஸ்தவ ,இஸ்லாம் மதங்களை எவ்வாறு ஏற்றார்களோ ,பின்பற்றினார்களோ அந்த இடத்தில் சிங்கள மக்களின் தாக்கம் தென்னிலங்கையின் அரசியல் தாக்கம்,அவர்கள் பௌத்தர்களாக இருந்தபடியால் தமிழர்களுடைய மனோநிலையில் சிங்களம் பௌத்தமாக சித்திகரிக்கப்பட்டுள்ளது.
எனவே தமிழர்கள் பௌத்தர்களை பார்க்கின்ற விதம் சிங்கள மதமாகவேயாகும். சிங்களம் வேறு ,பௌத்தம் வேறு என்று தமிழர்கள் மனதில் ஏற்படவில்லை.யார் புத்த பெருமானை வணங்குகிறார்களோ அவர்களே சிங்களவர்கள் என்றே விளங்கிக்கொள்கிறார்கள்.
தமிழர்களுக்கான பீடத்தினை உருவாக்கி இருந்தால் இந்த நாட்டில் சிங்களவர்களாக ,தமிழர்க்ளாக அடித்துக்கொண்டிருக்கலாம்.புத்த பெருமான் என்பவர் தமிழனுக்கு எதிரானவர் அல்ல. இந்து மதத்தில் பிறந்த மிகப்பெரிய மகான். இலங்கையில் தமிழ் தெய்வங்கள் இல்லாத இடமே கிடையாது .என்றார்.
பிற செய்திகள்