இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக இன்று மோதர பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் நிலையத்திற்கு அவர் அழைக்கப்பட்டு வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 13 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் பங்குபற்றியமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காகவே பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக அவர் மீது நாளை 24ம் திகதி வழக்கு உள்ளதால், இன்று அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற செய்திகள்