
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்னும் இரண்டு வாரங்களில் நாடு திரும்பக்கூடும் என்று ரொயட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, கடந்த ஜூலை மாதம் மக்கள் எழுச்சியிலிருந்து தப்பிச் சென்றார்.
முன்னதாக மாலைத்தீவுக்கு சென்ற அவர், சிங்கப்பூரில் தங்கியிருந்து தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.
கோட்டாபய நாளை புதன்கிழமை திரும்பி வரலாம் என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இருப்பினும், ஆனால் அவரது பாதுகாப்பு குறித்து ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதால் வருகை ஒத்திவைக்கப்பட்டது.
தனிப்பட்ட ஜெட் விமானம் மற்றும் பாதுகாப்பு உட்பட்ட வகையில் கோட்டாபயவுக்கு இதுவரை பல நுாறு மில்லியன் ரூபாய்கள் செலவு ஏற்பட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும்,இந்த அதிக செலவும் அவர் இலங்கைக்கு திரும்ப காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்