
ரொறன்ரோவில் அண்மையில் (11) ரொறன்ரோவில் நடைபெற்ற கனேடிய புலம்பெயர்ந்தோர் சஞ்சிகையின் வருடாந்த விருது வழங்கும் விழாவில், 2022 ஆம் ஆண்டின் முதல் 25 கனேடியக் குடியேற்றக்காரர்களில் இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்கள், கலாநிதி சிவகுமார் குலசிங்கம் மற்றும் பேராசிரியர் ஜனக ருவன்புர ஆகியோர் அடங்குவர்.
இந்நிலையில், 2022-ஆம் ஆண்டின் சிறந்த 25 கனேடிய புலம்பெயர்ந்தவர்களில் (Top 25 Canadian immigrants of 2022) இரண்டு இலங்கை வம்சாவளி கனேடியர்களான மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் மற்றும் பேராசிரியர் ஜானக ருவன்புர ஆகியோர் விருதை பெற்றனர்.
குறித்த விருது பெற்ற இலங்கை வம்சாவளியினரில், டாக்டர் சிவகுமார் குலசிங்கம் தமிழர் ஆவார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டதாரியான சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam) , இலங்கையிலுள்ள National Rehabilitation Hospital மருத்துவமனையில் முன்னணி மருத்துவராக இருந்தவர் ஆவார்.
குறிப்பாக,முன்னணி மருத்துவராக இருந்த அவர், 2008-ஆம் ஆண்டு கனடாவிற்கு புலம்பெயர்ந்தார். கனடாவில் மருத்துவத் தொழில் செய்வதற்கான உரிமம் பெறுவதற்கு அவர் கடினமாக உழைத்துள்ளார்.
பல தடைகளைத் தாண்டி, இன்று University Health Network என்னும் மருத்துவமனைகள் அமைப்பில் மருத்துவராகவும், ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகவும் மருத்துவர் சிவகுமார் குலசிங்கம் (Dr. Sivakumar Gulasingam)பணியாற்றி வருகிறார்.
அதேவேளை ஏற்கெனவே, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் மருத்துவத்தில் மனிதநேயத்திற்கான மைக்கேல் கார்டன் விருது மற்றும் ஆண்டின் மிகச் சிறந்த இளைஞர்கள் – மனிதாபிமான மற்றும் தன்னார்வ சேவைகள் உட்பட பல மதிப்புமிக்க விருதுகளை டாக்டர் குலசிங்கம் பெற்றுள்ளார்.
மேலும், கனேடிய புலம்பெயர்ந்தவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களது சாதனைகளை கொண்டாடும் விதமாக Top 25 Canadian immigrants விருதுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது.
ரொறன்ரோவில் நடைபெற்ற Canadian Immigrant பத்திரிக்கை நடத்திய இந்த வருடாந்த விருது வழங்கும் நிகழ்வில் கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ குமார நவரத்னவும் கலந்துகொண்டார்.
பிற செய்திகள்