மேயர் மணிவண்ணனின் நீலப் படையணி நாளை முதல் களத்தில்!

யாழ். மாநகர சபையின் திண்மக்கழிவகற்றலை கண்காணிக்கும் முகமாக கடந்த ஆண்டு உலகத்தில் நேர்மை, தூய்மை, பண்பு, நம்பிக்கை ஆகியவற்றின் அடையாளமாக பார்க்கப்படுகின்ற நீல நிற சீருடையணிந்து யாழ். மாநகர சபையின் விசேட அணியினர் பணிகளினை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளனர்.

இது தொடர்பிலான அறிவித்தல் நேற்று மாநகர முதல்வர் வெளியிட்டார்.

இச் சீருடையின் நிறம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கிலிருந்து மாநகர முதல்வர் மணிவண்ணன் அண்மையில் விடுதலை செய்யப்பட்டதுடன் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது. அத்துடன் குறித்த சீருடைகள் நீதிமன்றத்தால்  மீண்டும் யாழ்.மாநகர சபையிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது நடைபெற்றுவரும் நல்லைகந்தன் பெருந்திருவிழாவின் போது பருத்தித்துறை வீதியால் வரும் காவடிகளை ஒழுங்குபடுத்தல் தொடர்பான வீதிப்போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் பணியுடன் மீண்டும் பணி ஆரம்பமாகவுள்ளது.

அந்தவகையில் நாளை முதல் அவர்கள் மீண்டும் மாநகரில் தங்கள் பணிகளை தொடங்குவர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *