இலங்கையில் மட்டுமல்ல சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சர் விமல் வீரசன்ச தெரிவித்தார்.
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், 1977ஆம் ஆண்டு முதல் கடனில் தங்கியிருந்த செயற்றிட்டங்களுக்கு முதலீடு செய்த அனைவரும் தற்போதைய பொருளாதார சரிவிற்கு பொறுப்புக் கூறவேண்டும்.
சிங்கப்பூரிலும் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை 18 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. அந்நாட்டில் பல பொருட்களின் விலை மட்டமும் உயர்ந்துள்ளது.
எனவே, இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.
அதிகாரத்தைப் பெற்றும் அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை! கரு ஜயசூரிய






