நாட்டிலுள்ள அனைத்து 1,400 சிசு சரியா பேருந்துகளும் எதிர்வரும் திங்கள்கிழமை (22) முதல் இயக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) தெரிவித்துள்ளது.
தரம் 06 – 09 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதையடுத்து இந்த பஸ்கள் சேவையில் இணைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
இதேவேளை, வரும் திங்கட்கிழமை முதல் தரம் 06 – 09 வரையான மாணவர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






