300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு தற்காலிக தடை!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 300இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிகளுக்கு மறு அறிவித்தல் வரை தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதற்கமைய, சொக்கலேட், வாசனை திரவியங்கள், ஆண்கள் மற்றும் பெண்களின் உடைகள், உள்ளாடைகள், கைக்கடிகாரங்கள், மின் கேத்தல்கள், உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அந்நிய செலாவணி கையிருப்பை கையாளும் வகையில் இந்த தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *