
போதைக்கு அடிமையானவர்கள், போராளிகள் மற்றும் வன்முறை தீவிரவாத குழுக்களின் உறுப்பினர்களுக்காக புனர்வாழ்வு பணியகம் ஒன்றை அமைக்க எதிர்பார்ப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பணியகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்திற்கு இந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் சிகிச்சை, மறுவாழ்வு, பிந்தைய பாதுகாப்பு மற்றும் தொடர்புடைய செயல்பாடுகள் பணியகத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தற்போதுள்ள புனர்வாழ்வு நிலையங்கள் பல ஆண்டுகளாக சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன, கந்தகாடு போதைப்பொருள் மறுவாழ்வு மையத்தில் அண்மையில் ஏற்பட்ட சம்பவங்கள் இதற்கு உதாரணங்களாகும்.
இதுபோன்ற மையங்களில் உள்ளவர்கள், தாம், பொறுப்பான அதிகாரிகளால் தவறாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.
இவ்வாறான நிலையங்கள் இலங்கையில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் பணியகத்தின் கீழ் வருகின்றன.மேலும் அவை பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டவை என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே அவை, பல்வேறு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன.
கந்தகாடு சம்பவம் தொடர்பில் தற்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
பிற செய்திகள்