
நாட்டை வந்தடைந்துள்ள கப்பலில் இருந்து 30,000 மெற்றிக் டன் டீசல் இன்றைய தினம் தரையிறக்கப்பட உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஒட்டோ டீசல் கப்பல், எதிர்வரும் 25 முதல் 26 ஆம் திகதிக்கு இடையிலும் நாட்டை வந்தடைய உள்ளது.
அத்துடன், 92 ஒக்டேன் ரக பெற்றோல் கப்பல் 27 முதல் 29 ஆம் திகதிக்கு இடையிலும் நாட்டுக்கு வரவுள்ளதாக ட்விட்டர் பதிவு ஒன்றில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடைய, மண்ணெண்ணெய் மற்றும் விமான எண்ணெய் விநியோகம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.