யாழ். நெடுங்கேணி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் !

யாழ்ப்பாணம் – நெடுங்கேணி கந்தசாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்ற தொனிப்பொருளில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நெடுங்கேணி கந்தசுவாமி ஆலயத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

நிரந்தர அரசியல் தீர்வை வலுப்படுத்துவதற்கான 100 நாள் போராட்டத்தின் 24வது நாளான இன்றும் பல்வேறு கோரிக்கைகளை போராட்டக்காரர்கள் முன்வைத்துள்ளனர்.

‘கௌரவமான உரிமைகளுக்கான மக்களின் குரல், மக்களின் குரல் ஒருபோதும் அடக்கப்படவில்லை, ஜனநாயகப் பாதையில் மக்களுக்காக மக்கள்’ போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *