பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 76 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் விசேட பூஜை வழிபாடொன்று இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட அரச அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலில் , திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வர கோவிலில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.
நாட்டுக்கும், மக்களுக்கும்,பிரதமர் உட்பட அனைவருக்கும் ஆசி வேண்டியே இப்பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, மாவட்ட அரச அதிபர் , மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.ஆர்.கே.எஸ்.குருகுலசூரிய, ஏனைய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






