
யாழ், ஓக 25
வரலாற்றுப் பெருமையும் ஆன்மீக சிறப்பும் கொண்ட நல்லையம்பதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கந்தப் பெருமானின் இரதோற்சவம் வெகு விமர்சையாக இன்று(25) நடைபெறுகின்றது.
முத்தமிழால் வையகத்தாரையும் வாழ வைக்கின்ற முருகன் சித்திர தேரிலே அழகுத் திருக்கோலமாக பவனி வருகின்ற காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நல்லையம்பதியில் கூடியிருக்கின்றனர்.