
இலங்கையில் இனங்காணப்பட்டுள்ள டெல்டா திரிபின் துணைத் திரிபு சிறுவர்களிடையே வேகமாகப் பரவக்கூடியது என்று மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
இலங்கை கொரோனா டெல்டா திரிபின் துணைத் திரிபு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சிறுவர்களிடையே வேகமாகப் பரவக்கூடியது. அதனால் பெற்றோர் அவதானமாக இருக்க வேண்டும்.
முழுமையாகத் தடுப்பூசி ஏற்றியவர்களுக்கு கொரோனாத் தொற்றின்போது இலோசான அறிகுறிகளே தென்படுகின்றன. கொரோனாத் தொற்று ஏற்பட்ட நபருக்கு தெரியாது, ஏனையோருக்கு தொற்று பரவும் என்பதால் அறிகுறிகளை உணர்ந்தால் தனிநபர் குறைந்தபட்சம் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.-என்றார்.