
கொழும்பு, செப் 15
நீர் கட்டணம் செலுத்தாததன் காரணமாக 21,000 க்கும் மேற்பட்ட நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் மாத்திரம் 5.2 பில்லியன் ரூபாய் நிலுவை தொகை காரணமாக 21,527 நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாதா தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் செலுத்தத் தவறியுள்ள நீர் கட்டணங்களின் நிலுவை 13 மில்லியனுக்கு மேற்பட்டதாகும் மேலும் பொது அதிகாரிகள் 90 மில்லியன் ரூபாவை செலுத்த வேண்டியுள்ளதாகவும் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து 3 மில்லியன் ரூபா நிலுவை தொகை பெறப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





