திலீபனுடன் மூன்றாம் நாள் – 17.09.1987

17.09.1987
காலை ஆறு மணிக்­குத் துயில் எழும்­பிய திலீ­ப­னின் முகத்­தைப் பார்த்த எனக்கு ஒரு கணம் அதிர்ச்­சி­யா­யி­ருந்­தது. கார­ணம், அவ­ரின் உத­டு­கள் இரண்­டும் பாளம்­பா­ள­மாக வெடித்து வெளி­றிப்­போ­யி­ருந்­தன. கண்­கள் நேற்­றைக்கு இருந்­த­தை­விட இன்­னும் சற்று உள்ளே போயி­ருப்­பது போல் தோன்­றி­யது. முகம் வறண்டு, காய்ந்து கிடந்து குழம்­பி­யி­ருந்­தது. ‘பல் விளக்கி முகம் கழு­வ­வில்­லையோ?’ ‘இல்லை வாஞ்­சி­யண்ணை வேண்­டாம்’ கலைந்­தி­ருந்த தலை­ம­யிரை நானே அவ­ர­ரு­கில் சென்று வாரி விடு­கி­றேன். அவர் இன்­னும் சிறு­நீர் கழிக்­க­வில்லை. ‘வெளிக்­குப் போகேல்­லையோ?’ என்று மெது­வாக கேட்­கி­றேன்.

‘போக­வே­ணும் போல­தான் இருக்கு’ ‘சரி கீழே இறங்கி வாருங்கோ’ என்று கூறி­விட்டு, மேடையை விட்டு நானே முத­லில் இறங்கி, கீழே இறங்­கு­வ­தற்கு உதவி செய்ய முயன்­றேன். ‘வேண்­டாம் விடுங்கோ நானே வரு­கின்­றேன்’ என்று என் கையை விலக்­கி­விட்டு தானே கீழே குதிக்­கின்­றார். மனதை எவ்­வ­ளவு திட­மாக வைத்­தி­ருக்­கின்­றார் என்று எனக்­குள்­ளேயே ஆச்­ச­ரி­யப்­பட்­டேன். மறை­வி­டத்­துக்­குச் சென்ற அவர் சிறு­நீர் கழிக்க முடி­ யா­மல் சிர­மப்­பட்­டார். 5 நிமி­டம்… 10 நிமி ­டம்… 15 நிமி­டம்… 20 நிமி­டம்… நிமி­டங்­கள் ஓடிக்­கொண்­டி­ருக்­கின்­றன.

ஆனால், எவ்­விதப் பய­னும் ஏற்­ப­ட­வில்லை. அவ­ரைப் பார்க்க எனக்கு வருத்­த­மாக இருந்­தது. என் கண்­கள் என்­னை­ய­றி­யா­மலே கலங்­கு­கின்­றன. மேடை­யின் வலப்­பு­றத்­தில் ஏறி அமர்ந்த திலீ­பன் தூரத்­தில் தெரி­யும் வழக்­க­மான ஆட்­களை அழைத்து உரை­யா­டத் தொடங்­கி­னார். ‘கண்­ட­படி பேசி­னால் களைப்பு வரும் கொஞ்­சம் பேச்­சைக் குறை­யுங்கோ’ என்று அவ­ரைத் தடுக்க முயல்­கி­றேன். ஆனால், என்­னால் முடி­ய­வில்லை. தனக்கே உரி­ய­ சி­ரிப்பை என் வார்த்­தை­க­ளுக்­குப் பதி­லாக்­கி­விட்டு தொடர்ந்து பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார். கடை­சி­யாக அவர் நீர் அருந்தி 45 மணித்­தி­யா­லங்­கள் முடிந்துவிட்­டன. இன்­னும் எத்­தனை நாள்­க­ளுக்­கு­தான் அவர் இப்­படி தன்­னைத்­தானே வருத்­தப்­போ­கி­றார்? இப்­போதே சிறு­நீர் கழிக்க முடி­யா­மல் கஷ்­டப்­ப­டத் தொடங்­கி­விட்­டார்.

இன்­னும் இரண்டு நாள்­கள் போனால் என்­னென்ன நடக்­குமோ? என்று எண்­ணிய நான் அவ­ரின் காதுக்­குள் குசுகுசுக்­கி­றேன். ‘‘என்ன பகி­டியா பண்­ணு­றீங்கள்?… ஒரு சொட்­டுத் தண்­ணீ­ரும் குடிக்­க­மாட்­டேன் என்ற நிபந்­த­னை­யு­டன்­தானே இந்த உண்­ணா­வி­ர­தத்­தைத் தொடங்­கி­ன­னான்… பிறகு எப்­படி நான் தண்­ணீர் குடிக்க வேண்­டு­மென்று கேட்­டீங்க?’’ என்று ஆவே­சத்­து­டன் என்­மீது பாய்­கி­றார். இல்லை ‘‘இப்­பவே உங்­க­ளுக்­குச் சலம் போறது நிண்டு­போச்சு, இனி­யும் நீங்­கள் தண்­ணீர் குடிக்­கா­மல் இருந்­தால் மேலும் மேலும் கஷ்­ட­மாக இருக்­குமே! அதுக்­கா­கத்­தான் கேட்­ட­னான்….’’ என்ற அசடு வழி­யக் கூறி­விட்டு வேறு பக்­கம் முகத்­தைத் திருப்­பிக்­கொண்­டேன்.

‘‘இனி­மேல் என்­னைத் தண்ணீர் குடிக்­கச்­சொல்­லிக் கேட்­க­வேண்­டாம் …சரியோ?… உண்­ணா­வி­ர­தம் என்­றால் என்ன? தண்­ணீர், குளுக்­கோஸ், இள­நீர் எல்­லாமே உண­வு­தான்… இந்த உண­வு­களை எடுத்­துக்­கொண்டு எவ்­வ­ளவு நாளும் உயிர் வாழ­லாம். ஆனால், அது உண்­ணா­வி­ர­தம் இல்லை. உண்­ணா­வி­ர­தம் எண்­டால் அதுக்கு அர்த்­தம் வேணும்…. ஒரு புனித இலட்­சி­யம் நிறை­வேற வேணு­மெண்­ட­துக்­கா­கத்­தான் எங்­களை நாங்­கள் வருத்­திக்­கொண்டு உண்­ணா­வி­ர­தம் இருக்­கி­றது. இது வெறும் அர­சி­யல் லாபத்­துக்­காக தொடங்­கப்­பட்­ட­தல்ல… வயிறு முட்­டக் குடித்­து­விட்டு மக்­க­ளை­யும் ஏமாற்ற என்­னால் முடி­யாது’’ அவ­ரின் பேச்­சில் இருந்த உண்­மை­கள் எனக்­கும் தெரி­யும். ஆனால், திலீ­ப­னின் உயிர் மிக­வும் பெறு­மதிமிக்­கது… அதை இப்­படி வருத்த விடு­வதா? என்ற ஏக்­கத்­தில்­தான் அப்­ப­டிக் கேட்­டேன். ஆனால், அவர் தன் உயர்ந்த சிந்­த­னை­யால் என் பேச்­சுக்கு ஆப்பு
வைத்­து விட்­டார்.


µ µ µ
நேரம் செல்லச் செல்ல நல்­லூர் ஆலய மைதா­னம் நிரப்பி வழிந்து கொண்­டி­ருந்­தது. கடந்த இரு நாள்களாக ஆயி­ரக்­க­ணக்­காக வந்­தி­ருந்த சனக்­கூட்­டம், இன்று லட்­சத்­தைத் தாண்­டி­யி­ருந்­தது. யாழ்ப்­பாண நக­ரத்­தில் உள்ள கல்­லூ­ரி­க­ளி­லி­ருந்து மாணவ, – மாண­வி­கள் காலை 9 மணி முதல் வரிசை வரி­சை­யாக வெள்­ளைச் சீரு­டை­யில் அணி­வ­குத்து வந்து மைதா­னத்தை நிறைக்­கத் தொடங்­கி­னர். திலீ­பன் ‘தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின்’ ஓர் அங்­கத்­த­வர் என்ற நினைப்பு விடு­பட்டு ‘தமிழ் இனத்­தின் பிர­தி­நிதி’ என்ற எண்­ணம்­தான் அந்­தச் சனக்­கூட்­டத்­தி­னர் மத்­தி­யில் நிறைந்­தி­ருந்­தது. தாய்க்­கு­லம்-­ தி­லீ­பன் வாடி வதங்­கி­யி­ருந்த கோலத்­தைக் கண்டு கண்­ணீர் சிந்­தி­யது. அந்­தக் கண்­ணீர் மழை­யில் இத­யம் கனிந்துவிட்ட வரு­ண­ ப­க­வான் கூடத் திடீ­ரென்று பல­மா­கக் கண்­ணீர் சொரி­யத் தொடங்­கி­விட்­டான். ஆம்! அன­லா­கக் கொதித்­துக் கொண்­டி­ருந்த சூரி­யன், ஒரு பிள்­ளை­யின் உடலை வெப்­பத்­தி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­கா­கத் தன்­னைத் தானே கரு­மே­கத்­தின் போர்­வைக்­குள் மூடிக்­கொண்­டான். மழை­நீர் கோவில் மைதா­னத்­தில் ஆறாக ஓடிக்­கொண்­டி­ருந்­தது. ஆனால், பொது­மக்­க­ளில் ஒரு­வர்­கூட எழும்­பா­மல் அப்­ப­டியே இருந்­த­னர்.

மூன்­றாம் நாளான இன்று இரண்­டா­வது மேடை­யில் சூடான பேச்­சுக்­க­ளும், கண்­ணீர்க் கவி­தை­க­ளும் முழங்­கிக்­கொண்­டி­ருந்­தன. பேச்­சா­ளர்­க­ளில் ஒரு­வ­ரும், எமது தீவிர ஆத­ர­வா­ள­ரு­மான காங்­கே­சன்­துறை கரு­ணா­னந்­த­சி­வம் ஆசி­ரி­யர் இப்­ப­டிப் பேசி­னார் ‘தியாகி திலீ­ப­னின் உயிர் விலை­ம­திப்­பற்­றது. அவர் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்கு மட்­டும் உரி­ய­வர் அல்லர்… அவர் தமிழ் இனத்­துக்கே சொந்­த­மா­ன­வர்… அப்­ப­டிப்­பட்ட திலீ­பன் ஒரு சொட்டு நீரா­வது அருந்தி தன் உட­லைக் காப்­பாற்ற வேண்­டும். அவர் தன் பிடி­வா­தத்­தி­லி­ருந்து இறங்கி நீர் உணவு அருந்தி எம் கவ­லை­யைப் போக்­க­வேண்­டும்… இது எனது வேண்­டு­கோள் மட்­டு­மல்ல இங்கே வந்­தி­ருக்­கும் இலட்­சக்­க­ணக்­கான மக்­க­ளின் வேண்­டு­கோ­ளும் இது­தான்….’’ அந்­தப் பேச்­சைக் கேட்ட திலீ­ப­னின் முகம் வாடி­யதை நான் அவ­தா­னித்­தேன். தான் பேசப்­போகிறேன் எனக் கூறி­னார்.

அவ­ரி­டம் ஒலி­வாங்­கி­யைக் கொடுத்­தேன்…’ இந்த மேடை­யில் பேசிய ஓர் அன்­பர் என்னை நீர் உணவு அருந்­தும்­படி கூறி­யமை என்னை அவ­மா­னப்படுத்­து­வது போல் இருக்­கி­றது…. நான் இந்த மேடை­யிலே நீரா­கா­ரம் எது­வும் எடுக்­கா­மல் தான் உண்­ணா­வி­ர­தத்தை ஆரம்­பித்­தேன்… இறு­தி­வரை இந்த இலட்­சி­யத்­தில் இருந்து மாற­மாட்­டேன். நீங்­கள் இந்­தத் திலீ­பனை நேசிப்­பது உண்­மை­யாக இருந்­தால், தயவுசெய்து இனி­மேல் என்னை யாரும் நீரா­கா­ரம் அருந்­தும்­படி வற்­பு­றுத்த வேண்­டாம். உங்­கள் திலீ­ப­னுக்கு நிறைந்த மனக்­கட்­டுப்­பா­டும் தன்­னம்­பிக்­கை­யும் உண்டு… என் கோரிக்­கை­களை இந்­திய அரசு நிறை­வேற்­றா­விட்­டால் நீரே எடுக்­கா­மல் இறப்­பேனே தவிர, இந்த அரிய உயி­ரைக் காப்­பாற்­று­வ­தற்­காக என் இலட்­சி­யத்­தி­லி­ருந்து ஒருபோதும் பின் வாங்க மாட்­டேன்’’ அவர் பேசி முடித்­த­தும், மழை ஓய்ந்­து­விட்­டது.

அன்­றி­ரவும் திலீ­பன் சிறு­நீர் கழிக்க முடி­யா­மல் மிக­வும் அவஸ்­தைப்­பட்­டார். வைத்­தி­யர் ஒரு­வரை அழைத்­து­வந்து அவ­ரைப் பரி­சோ­திக்க ஏற்­பாடு செய்­தோம். ஆனால், திலீ­பன் அதை மறுத்­து­விட்­டார். எந்­த­வித பரி­சோ­த­னை­யும் சிகிச்­சை­யும் தான் இறக்­கும் வரை தனக்கு அளிக்­கக்­கூ­டா­தென்று உறு­தி­யாகக் கூறி­விட்­டார். அன்று அவர் கஷ்­டப்­பட்டு உறங்­கும்­போது நேரம் நள்­ளி­ரவு 1 மணி. அவ­ரின் நாடி­த்து­டிப்பு 11, சுவா­சம் 24

Leave a Reply