யாழ். பல்கலைக்கழக இந்து கற்கைகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட “இந்து தரிசனம்” – முதலாவது சர்வதேச இந்து மாநாடு அண்மையில் இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் மதத்தலைவர்கள், பேராசிரியர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை ஆசிரிய மாணவர்கள், கலாசார உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.







