நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை: இலங்கை மத்திய வங்கி

கொழும்பு,செப் 18

நிதி நிறுவனங்களின் நிலையியல் தன்மையை நடைமுறைப்படுத்துவதற்காக நிதி புலனாய்வு பிரிவினால் நிதி அபராதங்களை விதிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

2006 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நிதி பரிவர்த்தணை அறிக்கையிடல் சட்டத்தின் படி குறித்த அபராதங்கள் விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அபராத தொகையை தீர்மானிக்கும் போது, சட்டத்தை மீறி செயற்பட்ட தன்மை மற்றும் அதன் துரிதத் தன்மை கருத்தில் கொள்ளப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது

Leave a Reply