திலீ­ப­னு­டன் நான்­காம் நாள் (18.09.1987)

18.09.1987
கடந்த மூன்று நாள்­க­ளாக மேடை­யில் திலீ­ப­னு­டன் சேர்ந்து ஒரு­சொட்டு நீர்­கூட அருந்­தாது இருந்­தேன். மான­சீ­க­மாக திலீ­ப­னின் நட்­புக்கு உய­ரிய மதிப்­ப­ளிப்­ப­வன் நான். அத­னால்­தான் என்­னால் எது­வும் அருந்­த­மு­டி­ய­வில்லை. திலீ­பன் ஒன்­றும் அருந்­த­வில்­லையே, உண்­ண­வில்­லையே என்ற வேத­னை­தான் என் வாய்க்கு பூட்­டுப் போட்­டதே தவிர வேறு ஒன்­றும் இல்லை.
ஆனால், அன்று முற்பகல் 10 மணி­ய­ள­வில் தலை­வர் பிர­பா­க­ரன் என்னை அழைத்­து­வ­ரச் சொன்­ன­ார் என மாத்­தையா என்­னி­டம் கூறி­ய­போது, என் நெஞ்சு பட­
ப­ட­வென்று அடித்­துக்­கொண்­டது. தலை­வர் மிக­வும் கண்­டிப்­பா­ன­வர். என்ன சொல்­லப்­போ­கி­றாரோ என்ற கேள்­வியை எனக்­குள் பல­முறை கேட்­டுக்­கொண்­டேன். தலை­வ­ரின் அறைக்­குள் பயத்­து­டன் சென்­றேன்.

இருங்க வாஞ்சி அண்ணா என்ற அன்­பான குரல் என்னை வர­வேற்­றது. ஆச்­ச­ரி­யத்­தால் என் கண்­கள் அகன்­று­விட்­டன. சாப்­பி­டாத மயக்­கத்­தில் என் கண்­க­ளும் மயங்­கி­விட்­ட­னவா என்று, ஒரு கணம் சிந்­தித்­தேன். இல்லை! என் முன் இருப்­ப­வர், தலை­வர் பிர­பா­க­ரன் தான்!

நீங்க படிச்­ச­வர், வய­தில் மூத்­த­வர். நான் சொல்ல வேண்­டி­ய­தில்லை. திலீ­ப­னில் அன்பு இருக்க வேண்­டி­ய­து­தான். அதற்­காக இப்­ப­டியா சொல்­லா­மல் கொள்­ளா­மல் எது­வும் குடிக்­கா­மல், சாப்­பி­டா­மல் இருப்­பது? நீங்­கள் அவ­ரைப் பார்க்­க­வேண்­டி­ய­வர். உங்­கள் உடம்­பில் சக்தி இருந்­தால்­தான் அதற்கு உங்­க­ளால் முடி­யும். நான் திலீ­ப­னில் அன்­பில்­லா­த­வன் என்றா நினைக்­கி ­றீர்­கள்? திலீ­பன் என் பிள்­ளை­யைப் போன்­ற­வன். நானே அவனை இந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்துக்கு அனு­ம­தித்­தி­ருக்­கி­றே­னென்­றால் என் மனத்­தைக் கல்­லாக்­கித்­தான் அதைச் செய்­தி­ருக்­கி­றேன்.

இந்த உண்­ணா­வி­ர­தப் போராட்­டத்­துக்­குத் தேவை­யான மனோ­தி­டம் திலீ­ப­னி­டம் இருப்­ப­தால்­தான், உண்­ணா­வி­ர­தத்தை அவன் நடத்த விரும்­பி­ய­போது நான் அதற்­குச் சம்­ம­தித்­தேன். ஒவ்­வொ­ரு­வ­ராக இந்தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டு­வ­து­தான் நல்­லது. திலீ­ப­னுக்கு அடுத்த சந்­தர்ப்­பம் உங்­க­ளுக்­குத் தர முயற்­சிக்­கி­ றேன். அது­மட்­டும் நீங்­கள் வழக்­கம்­போல் சாப்­பிட்டு, குடித்து இருக்க வேண்­டும். திலீ­பனை வடி­வா­கக் கவ­னித்­துக்­கொள்­ளுங்­கள். இப்­போது எதை­யா­வது குடித்து உங்­கள் பிடி­வா­தத்தை விட்­டு­வி­டுங்­கள் என்று கூறிய தலை­வர், சொர்­ணனை அழைத்து குளுக்­கோ­சும் எலு­மிச்­சம் பழ­மும் வர­வ­ழைத்து, தானே தன் கைப்­ப­டக் கரைத்து, அந்த கிளாசை என்­னி­டம் நீட்­டி­னார். எவ்­வ­ளவு கூறி­ய­பின் என்­னால் எது­வும் திருப்­பிக்­கூற முடி­ய­வில்லை. மட­ம­ட­வென்று வாங்­கிக் குடித்­தேன்.

திலீ­ப­னின் உண்­ணா­வி­ர­தச் செய்தி இலங்­கை­யில் மட்­டு­மின்றி உல­கம் முழு­வ­தும் பர­வத் தொடங்­கி­யது. லண்­டன், பிரான்ஸ், ஜேர்­மனி, சுவிற்­சர்­லாந்து போன்ற நாடு­க­ளில் இருந்­தும் அரபு நாடு­க­ளி­லி­ருந்­தும் தொலை­பேசி அழைப்­பு­கள் வந்து கொண்­டி­ருந்­தன. ஏன்? இந்­தி­யா­வின் தமி­ழ­கத்­தி­லும் இந்­தச் செய்தி, உணர்வு அலை­க­ளைக் கொந்­தி­ளிக்­கச் செய்­தன.

© © © © ©

இன்று திலீ­பன் உண்­ணா­வி­ர­தம் ஆரம்­பித்து நான் கா­வது நாள், அவ­ரது உடல் மிக­வும் அச­தி­யா­கக் காணப்­பட்­டது. பயற்­றங்­கா­யைப்­போல் வாடி வதங்கி கட்­டி­லின்­மேல் அவர் சுருண்­டு­கி­டந்த தோற்­றம் பார்ப்­ப­வர் நெஞ்­சங்­க­ளைப் பதை­ப­தைக்க வைத்­தது.
அப்­ப­டி­யி­ருந்­தும் அவர் இன்று மக்­கள் முன் உரை­யாற்­றி­னார். அவ­ரின் உரை பின்­வ­ரு­மாறு:

அன்­பார்ந்த தமி­ழீழ மக்­களே!

விளக்கு அணை­யு­முன்பு பிர­கா­ச­மாக எரி­யு­மாம். அது­போல இன்று நானும் உற்­சா­கத்­து­டன் இருக்­கி­றேன் என்­பது தெரி­கி­றது. இன்று தாரா­ள­மா­கப் பேச­மு­டி­கி­றது. போரா­டத் தயா­ரா­குங்­கள்! எனக்கு விடை தாருங்­கள்! ஒரு­வ­ரும் என்னை இந்­தப் போராட்­டத்­தைக் கைவி­டு­மாறு கேட்க வேண்­டாம். நானும் எனது தலை­வ­ரும் சேர்ந்து எடுத்த முடி­வு­தான் இது. மறைந்த போரா­ளி­கள் 650 பேரு­டன் சேர்ந்து 651ஆவது ஆளாகி மேலி­ருந்து பார்ப்­பேன். எங்­கள் உயிர் உங்­க­ளு­டன் ஒட்­டி­வி­டும். என்­னைப் பற்­றிக் கவ­லைப்­ப­டா­தீர்­கள். எனது அவ­யங்­கள் செய­லி­ழப்­ப­த­னால், இனி­மேல் மனி­த­னாக வாழ முடி­யாது என்­பது எனக்­குத் தெரி­யும்.

எமது வீரர்­கள் கொள்­கைக்­காக உயி­ரைக் கொடுப்­ப­வர்­கள். கொள்­கைக்­காக என்­னைத் தொடர்ந்து வரு­வார்­கள். அவர் க­ளை­யும் தடுக்­கா­தீர்­கள். நாங்­கள் ஐந்து ஆறு­பேர் சாவ­தால் எந்­த­வித தீங்­கும் வந்­து­ வி­டாது. மக்­கள் புரட்சி வெடிக்­கட்­டும். நான் மூன்று தட­வை­கள் பேசி­யுள்­ளேன். மூன்று தட­வை­க­ளும் ஒரே கருத்­தைத்­தான் பேசி­யுள்­ளேன் – என்­றார்.

வழக்­கத்­தை­விட நாடித்­து­டிப்பு 110ஆக அதி­க­ரித்­தி­ருந்­த­தில் இருந்து அவர் உடல் நிலை பாதிப்­ப­டை­யத் தொடங்­கி­விட்­டது என்­பதை நான் அறிந்து கொண்­டேன்.

சூரி­ய­னின் கதிர்­கள் பூமி­யெங்­கும் வியா­பித்­தி­ருந்­தன. அவ­ர­ருகே சென்று அவ­ரின் நாடித்­து­டிப்பு மெது­வா­கப் பரி­சோ­தித்­துக்­கொண்டே சுவா­சத்­தை­யும் எண்­ணு­கி­றேன். நாடித்­து­டிப்பு 120. சுவா­சத்­து­டிப்பு 24. சாத­ாரண நிலை­யி­லி­ருந்து மிக­வும் அசா­தா­ர­ண­மா­கக் கூடிக்­கொண்­டிருக்­கி­றது நாடித்­து­டிப்பு…! (நாடித்­து­டிப்பு சாதா­ர­ணம் 72-–80 சுவா­சம் 16-–22) நான்கு நாள்­க­ளாக நீரா­கா­ரம் உட்­கொள்­ளாத கார­ணத்­தி­னால் உட­லில் திர­வ­நிலை குறை­யத் தொடங்­கி­விட்­ட­தால், இரு­த­யத்­துக்­கும் நுரை­யீ­ரல்­க­ளுக்­கும் செல்­லும் இரத்­தத்­தின் அள­வும், கன­மும் குறை­யத் தொடங்­கி­விட்­டது.

வெகுநேரத்­தின் பின் கண் விழிந்த திலீ­பன், எழும்­பு­வ­தற்­குச் சக்­தி­யின்றி படுக்­கை­யி­லேயே கிடக்­கி­றார். மைதா­னம் சனக்­கூட்­டத்­தி­னால் நிரம்­பிக் கொண்­டி­ருக்­கி­றது. சில தாய்­மார் திலீ­பன் படுத்­தி­ருக்­கும் பரி­தாப நிலை கண்டு பொறுக்கமுடி­யா­மல் விம்மி விம்மி அழு­கின்­ற­னர். கிறிஸ்­த­வப் பாதி­ரி­யா­ரும், பல வரு­டங்­கள் சிறீ­லங்­காச் சிறை­யில் அடை­பட்­டுத் தாங்க முடி­யாத சித்­தி­ர­ வ­தைகளை அனு­ப­வித்து­வ­ரும் 1983 ஜூலை­யில் வெலிக்­க­டைச் சிறைச்­சா­லை­யில் 52 தமிழ்க் கைதி­கள், சிங்­கள இன­வா­தப்­பூ­தங்­க­ளால் கொல்­லப்­பட்ட சம­யம் அதிர்ஷ்­ட­வ­ச­மாக உயிர் தப்­பி­ய­வ­ரு­மா­கிய அருட்­தந்தை சிங்­க­ரா­யர் திலீ­ப­னைப் பார்ப்­ப­தற்­காக மேடைக்கு வந்­தார்.

ஒரு துற­வி­யாக இருந்­தா­லும் திலீ­ப­னின் கோலத்­தைக் கண்­ட­தும் அவர் அழுதே விட்­டார். திலீ­ப­னின் கரங்­க­ளைப் பற்றி அவர் அன்­போடு வரு­டி­னார். உடல் சோர்­வுற்று இருந்­த­போ­தி­லும் திலீ­பன் அவ­ரு­டன் மனம்­தி­றந்து வெகு­நே­ரம்­வரை பேசிக்­கொண்­டி­ருந்­தார். திலீ­ப­னின் பிடி­வா­தத்­தை­யும் திட­மா­னத்­தை­யும் நன்கு அறிந்­த­வர் அந்­தத் துறவி. அப்­ப­டி­யி­ருந்­தும் திலீ­பன் படுத்­தி­ருக்­கும் கோலத்­தைக் கண்டு பொறுக்க முடி­யா­மல் விசும்­பி­னார். கொஞ்­ச­மா­வது தண்­ணீர் அருந்­தி­விட்டு உண்­ணா­வி­ர­தத்­தைத் தொட­ரு­மாறு அவர் வற்­பு­றுத்­தி­னார். ‘பாதர்’ சிங்­க­ரா­யர் மீது திலீ­ப­னுக்கு எப்­போ­தும் மிகுந்த மதிப்­பும் பாச­மும் உண்டு. அப்­ப­டி­யி­ருந்­தும் தனக்கே உரிய புன்­மு­று­வ­லைக் காட்டி அதையே பதி­லாக்­கி­விட்டு அவ­ ரின் வேண்­டு­கோ­ளுக்­கு மௌன­மா­கி­னார் – திலீ­பன்.

© © © © ©
பாதர் சிங்­க­ரா­யர் சென்ற பின் ஈரோஸ் இயக்கத் தலை­வர் பால­கு­மா­ரும், இயக்க யாழ். மாவட்ட அர­சி­யல் பிரி­வுப் பொறுப்­பா­ள­ரும் ‘பரா’­­வும் மேடைக்கு வந்­த­னர். எந்த இயக்­கத்­த­வர்­க­ளா­னா­லும் அவர்­க­ளு­டன் சக­ஜ­மா­கப் பேசு­வ­தில் திலீ­ப­னுக்கு நிகர் திலீ­பன்தான். அவர்­க­ளும் திலீ­ப­னைத் தண்­ணீ­ரா­வது அருந்­தும்­படி வற்­பு­றுத்­தி­னர். ஆனால், அவர்­க­ளுக்­குக் கிடைத்த பதி­லும் மௌனம்­தான்.

செல்வி குக­சாந்­தினி, திரு­மதி நல்­லையா ஆகிய இரு பெண்­கள் திலீ­ப­னுக்கு ஆத­ர­வாக சாகும் வரை­யி­லான உண்­ணா­நோன்­பினை ஆரம்­பித்­த­னர். அத்­து­டன் வல்­வெட்­டித்­து­றை­யில் 5 தமி­ழர்­கள் ஏற்­க­னவே உண்­ணா­வி­ர­தம் ஆரம்­பித்­து­விட்­ட­னர் என பத்­தி­ரி­கை­யில் செய்தி வெளி­யா­கி­யி­ருந்­தது. அன்று மாலை தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளின் அர­சி­யல் பிரிவு ஆலோ­ச­கர், கலா­நிதி அன்­ரன் பால­சிங்­கம் திலீ­பனை வந்து சந்­தித்­தார். இந்­திய அர­சி­ட­மி­ருந்தோ இந்­தி­யத் தூது­வ­ரி­ட­மி ­ருந்தோ இது­வரை எந்­தப் பதி­லுமே கிடைக்­க­வில்லை என்று அவர் திலீ­ப­னி­டம் கூறி­னார்.

சில நாள்­க­ளுக்கு முன் இந்­திய அமைதி காக்­கும் படை­யின் பார­பட்­ச­மான நட­வ­டிக்­கை­க­ளை­யும், சிங்­கள இரா­ணு­வத்­துக்கு ஆத­ர­வான நட­வ­டிக்­கை­க­ளை­யும் கண்­டித்து ஒரு நாள் அடை­யாள மறி­யல் போராட்­டம் சகல இரா­ணுவ முகாம்­க­ளி­லும் பொதுமக்­க­ளால் நடத்­தப்­பட்­ட­போது யாழ். கோட்­டை­யின் முன்­பாக அன்­றைய மறி­யல் போராட்­டத்தை முடித்­து­வைத்து திலீ­பன் பேசிய பேச்சு என் நினை­வுக்கு வரு­கி­றது.

‘‘இந்த யாழ்ப்­பா­ணக் கோட்­டை­யிலே சில நூற்­றாண்­டு­ க­ளுக்கு முன் தமி­ழ­னின் கொடி பறந்­தது. அந்­தக் கொடியைப் போர்த்­துக்­கே­யர் பறித்­தெ­டுத்­த­னர். போர்த்­துக்­கே­ய­ரி­டம் இருந்து ஒல்­லாந்­த­ரும், ஒல்­லாந்­த­ரி­ட­மி­ருந்து, ஆங்­கி­லே­ய­ரும் கைப்­பற்­றிக்­கொண்­ட­னர். ஆங்­கி­ லே­ய­ரி­ட­மி­ருந்து சிங்­க­ள­வர் கடை­சி­யில் கைப்­பற்­றி­னர். இந்­தக் கோட்­டை­யிலே மீண்­டும் தமிழ்க்­கொடி. அதா­வது, புலிக்­கொடி பறக்­கும் காலம் வெகு­தூ­ரத்­தில் இல்லை. அந்­தத் தமிழ்க்­கொ­டி­யைப் பறக்க விடு­வ­தற்­காக, ஒவ்­வொ­ரு­வ­ரும் எமது உயிரை அர்ப்­ப­ணித்துக் கொண்டு வரு­கி­றோம். அதில் என்­பங்கு எப்­போது? என்­ப­து­தான் எமது கேள்­வி­யாக இருக்­க­வேண்­டுமே தவிர, பத­வி­கள் எமக்­குப் பெரி­ய­தல்ல. பத­வி­க­ளைத் தேடிச் செல்­ப­வர்­கள் புலி­கள் அல்ல! அதற்கு வேறு ஆட்­கள் இங்கே இருக்­கி­றார்­கள்! அந்­தத் தீர்க்­க­த­ரி­ச­னப் பேச்­சுக்கு உயிர்­வ­டி­வம் கொடுப்­ப­தற்­கா­கத்­தான்’’

Leave a Reply