95 வீதமான கட்டுமானம் தாமதம்

கொழும்பு,செப் 19

உள்ளூர் சந்தையில் தேவையான மூலப்பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக 95% நிர்மாணப் பணிகள் தாமதமாகியுள்ளதாக இலங்கை தேசிய கட்டுமான சங்கம் (NCASL) தெரிவித்துள்ளது.

இது நிர்மாணத்துறையில் பணியாற்றும் பெருமளவிலான மக்களை கவலையடையச் செய்துள்ளது என இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் பிரதித் தலைவர் எம்.டி.பெளல் தெரிவித்தார்.

கட்டுமானத் துறையில் சுமார் 1.5 மில்லியன் மக்கள் வேலை செய்கிறார்கள் என்றும் அவர்களில் 75% பேர் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *