செவ்வாய் கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருப்பதால் எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும்?

செவ்வாய் கிழமைகளில் ஏன் முருகனுக்கு உகந்தது என்கிறார்கள்.

செவ்வாய் கிழமைகளில் முருகனை நினைத்து விரதம் இருப்பதால்
எப்படிப்பட்ட பலன்கள் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்…

செவ்வாய் கிழமை என்றாலே முருகனுக்கு உரிய நாள். அதனால் செவ்வாய்க் கிழமைகளில் முருகனை வழிபாடு செய்யவும், அவருக்கான விரதம் இருப்பதற்கும் மிக சிறந்த நாள் ஆகும்.
அதற்கான காரணங்களும், அதன் பலன்களும் என்ன என்பதைப் பார்ப்போம்…

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் பறந்துவிடும் என்பார்கள். அப்படிப்பட்ட முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கவும், குடும்ப அமைதி, மன நிம்மதி அனைத்தும் தேடி வரும்.

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் எனும் செவ்வாய் பகவான்.
அந்த செவ்வாய் பகவானுக்குரியவர் தான் நம் தமிழ் கடவுள் முருகப்பெருமான் மற்றும் சக்தி தேவி. அதனால் தான் செவ்வாய் கிழமை முருகன் மற்றும் சக்தி தேவி, அம்பிகைக்கு உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது.

தமிழ் கடவுள் முருகனின் பிறப்பு கதை மற்றும் கார்த்திகேயன் அசைவம் சாப்பிடக் கூடியவரா, புராணம் என்ன சொல்கிறது? எப்படி விரதம் இருப்பது அல்லது வணங்குவது!

முருகனுக்குப் பிடித்த செந்நிற ஆடையை அணிந்து வழிபடுவது நல்லது. அதே போல் செந்நிற நைவேத்தியம், கனிகளை வைத்து தீபாராதனை செய்து வழிபடுவதால் நம் வாழ்வில் இருக்கும் தங்கு தடைகள் நீங்கி வாழ்க்கை சீராகும். அதோடு எதிர்பாராத அளவு புகழும், சக்தியும், நல்ல மங்கல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதே போல் உள்ளத்தில் நம்பிக்கை அதிகரிக்கும்.

முருகனின் வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இரு புறமும் இரு விளக்குகளில் ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி வழிபட்டு வருவதால் நம் வாழ்வில் சீரும், சிறப்புகள் வந்து சேரும்.

கார்த்திகேயன் அன்னதானப் பிரபு என்பதால், இந்த விரதம் மேற்கொள்ளும் போது உங்களால் முடிந்தளவு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான பலன் தரும். முருகப்பெருமானின் அருள் பெறலாம்.

முருகனுக்கு உகந்த நட்சத்திரமாக கார்த்திகை நட்சத்திரமும், விசாக நட்சத்திரமும் உள்ளது. இந்த கார்த்திகை, விசாக நட்சத்திரம் செவ்வாய்க் கிழமைகளில் அமைந்து அன்று நாம் விரதம் மேற்கொள்ள அந்த விரதத்திற்கு பலன் மிக அதிகம்.

[embedded content]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *