ஆரம்ப வகுப்பு மாண­வர்­கள் மீதான ஆசி­ரி­யர்­க­ளின் தாக்­கு­தல்­கள் யாழில் அதி­க­ரிப்பு

கொரோனா பெருந்­தொற்­றின் பின்­ன­ரான காலப்பகு­தி­யில் ஆரம்ப வகுப்பு மாண­வர்­கள் மீதான ஆசி­ரி­யர்­க­ளின் தாக்­கு­தல் சம்­ப­வங்­கள் யாழ். மாவட்­டத்­தில் அதி­க­ரித்­துள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

யாழ். மாவட்­டச் செய­ல­கத்­தில் அண்­மை­யில் இடம்­பெற்ற கூட்­டத்­தில் இந்த விட­யம் சுட்­டிக்­காட்­டப் ­பட்­டுள்­ளது.

ஆரம்ப வகுப்பு மாண­வர்­கள் மீது மிக மோச­மாக ஆசி­ரி­யர்­கள்தாக்­கு­வ­தால் பாதிப்­ப­டை­யும் மாண­வர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர். இவ்­வா­றா­ன­வற்­றில் இரண்டு அல்­லது மூன்று சம்­ப­வங்­கள் நீதி­மன்­றம் வரை­யில் சென்­றுள்­ளன.

தாக்­கு­தல் தொடர்­பில் இலங்கை மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வும் சிறப்­புக் கவ­னம் எடுத்து விசா­ரித்து வரு­கின்­றது. சித்­தி­ர­வதை என்ற சட்­ட­வ­ரம்­புக்கு கீழ் ஆசி­ரி­யர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­ப­டு­கின்­றது.

மாண­வர்­களை தண்­டிப்­பதை தாண்டி மிக மோச­மாக தாக்­கு­வது தொடர்­பில் அலட்­சி­ய­மாக இருக்க முடி­யாது என்று மாவட்­டச் செய­ல­கக் கூட்­டத்­தில் அதி­கா­ரி­கள் கருத்து வெளி­யிட்­டுள்­ள­னர்.

யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாதத்­தில் ஆகக் குறைந்­தது இரண்டு மாண­வர்­க­ளா­வது, ஆசி­ரி­யர்­க­ளால் தாக்­கப்­பட்­டமை தொடர்­பில் சிகிச்­சைக்­காக சேர்க்­கப்­ப­டு­கின்­ற­னர்.
ஆசி­ரி­யர்­க­ளின் செயல்­தி­றன் தொடர்­பில் அதி­கா­ரி­கள் மேற்­கொள்­ளும் அழுத்­தங்­க­ளும் மாண­வர்­கள் மீது மோச­மான தண்­டனை – தாக்­கு­தல் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணி­க­ளில் ஒன்று என­வும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது,

ஆசி­ரி­யர்­க­ளின் இத்­த­கைய போக்­கு­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அவர்­க­ளி­டையே விழிப்­பு­ணர்­வுச் செயற்­பா­டு­களை தீவி­ர­மாக முன்­னெ­டுப்­பது தொடர்­பி­லும் ஆரா­யப்­பட்­டுள்­ளது.

Leave a Reply