பட்ஜட்டை ஆதரித்த மூன்று எம்.பிக்களின் கட்சிப்பதவிகள் பறிப்பு!

கட்சி கட்டுப்பாடுகளை மீறி அரசுடன் இணைந்து வரவு செலவு திட்டத்துக்கு ஆதரவளித்த 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சியில் வகித்த பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம், ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகிய மூவருமே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன், கட்சியின் தீர்மானத்தைப் புறக்கணித்து நடந்ததற்காக அவர்களிடம் விளக்கம் கோரப்படவுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார் என முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பட்ஜட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். அதனையடுத்து, அந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கட்சி உறுப்புரிமையிலிருந்து ரிசாத் அதிரடியாக நீக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply