இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினை பற்றி ஸ்டாலின் – பாக்லே பேச்சு!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தில் நடைபெற்றதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, இந்திய − இலங்கை மீனவ பிரச்சினை குறித்தும், இருதரப்பு உறவுகள் குறித்தும் நீண்டநேர பேச்சு நடைபெற்றது என்றும் உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply