
டோக்கியோ, செப். 27: ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரை சென்றடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கடந்த ஜூலை 8 ஆம் திகதி உயிரிழந்த ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜப்பான் சென்றுள்ளார். இதைத் தொடர்ந்து, ஜப்பான் பிரதமர், அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.
ஜப்பானை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் நாட்டுக்கும் ஜனாதிபதி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.