கிளியில் மதுபானசாலை வேண்டாமென ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி,செப் 30

கிளிநொச்சி, கரடிப்போக்கு சந்திக்கு அருகில் புதிதாக மதுபானசாலை ஒன்றை அமைக்க அனுமதி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, குறித்த பகுதி மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த பகுதியில் மதுபானசாலை அமைக்கப்பட்டால், இளம் சமுதாயத்தினர் பாதிக்கப்படுவர் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஐந்து தடவைகள் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரையில் உரிய நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply