
உயிர்கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளை யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரும் பிரதான வியாபாரி ஒருவரை யாழ்ப்பாணப் பொலிஸார் நேற்றுமுன்தினம் கைது செய்துள்ளனர்.
யாழ். பொம்மைவெளிப் பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு உயிர் கொல்லி போதைப் பொருளான ஹெரோய்ன் எடுத்து வருவதாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.





