
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருவடி நிலை கடற்பரப்பில் ஆணொருவரின் சடலம் நேற்றுக் கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலம் மீனவர்களின் வலையில் சிக்கிய நிலையில் இருந்துள்ளது. அதை அவதானித்த மீனவர்கள் இது தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர்.
அதன் பின்னர் சடலம் மீட்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

