<!–
யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த தபால் புகையிரதத்துடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் 30 வயது மதிக்கதக்க 5 அடி உயரமும் பொது நிறம் உடையவர் என பொலிஸார் அடையாளங் கண்டுள்ளனர்.
கண்டியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் குறித்த உயிரிழந்த நபர், புகையிரதம் வரும்போது கையைகாட்டி புகையிரத தண்டவாளம் முன் நின்றுள்ளார் என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.






