
கொழும்பு,ஒக் 17
பல கோடி பெறுமதியான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வியாபார பங்குதாரராக அடையாளம் காணப்பட்ட இசுரு பண்டார என்ற நபரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (17) கைது செய்துள்ளனர்.
வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கைது செய்தனர்.

