கிராம உத்தியோகத்தர்களின் வேலை நேரம் தொடர்பில் தகவல் அறியும் சட்டமூலத்தில் சுட்டிக்காட்டு!

கிராம உத்தியோகத்தர்கள் தமக்கு வழங்கப்பட்ட பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்று வதற்கு தயாராக இருக்க வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு செவ்வாய், மற்றும் வியாழன் ஆகிய தினங்களில், காலை 8.30 மணி முதல் மாலை 4:15 மணி வரை, மக்கள் சந்திப்புக்காக அலுவலகத்தில் இருக்க வேண்டுமெனவும், தகவல் அறியும் . சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட் டது.

கிராம உத்தியோகத்தர்கள் தமது ஓய்வு நாள் தவிர்ந்த, வாரத் 4 தில் 6 நாட்களில் 24 மணி நேரமும் தமக்கு வழங்கப்பட்ட பிரிவில் கடமையாற்றுவதற்கு தயராக இருக்க வேண்டுமெ ன, யாழ்.மாவட்டச் செயலகத் திற்கு வழங்கப்பட்ட தகவல் அறியும் சட்டமூலத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

கிராம உத்தியோகத்தர்களுக்கு பொது நிர்வாக உள்நாட்டு அலு வல்கள் அமைச்சினால் வழங் கப்பட்ட அலுவல்கள் நாட்குறிப் பில்,அவர்களுக்குரிய கடமை தொடர்பில் விரிவாகக் குறிப்பி டப்பட்டது.கிராம உத்தியோகத் தர்கள் வாரத்தில் செவ்வாய் மற் றும் வியாழக்கிழமைகளில் முற்ப கல் 8:30 மணி முதல் பிற்பகல் 4:15 மணி வரை பொதுமக் கள் சந்திப்பிற்காக தமது அலு வலகங்களில் இருப்பதுடன், சனிக்கிழமைகளில் பிற்பகல் 12:30 மணி வரை பொதுமக் கள் சந்திப்பை மேற்கொள்ள வேண்டும்.

திங்கட்கிழமைகளில் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செய லாளரினால் அழைக்கப்படுவது டன்,ஏனைய 3 நாட்களில் தமது ஓய்வு நாள் தவிர்ந்த, இரண்டு நாட்களும் தமது பிரிவில் வெளிக்களக் கடமையில் ஈடு பட வேண்டுமெனவும், யாழ் மாவட்டச் செயலகத்திற்கு வழங் கப்பட்ட தகவல் அறியும் சட்ட மூலத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

பிறசெய்திகள்

Leave a Reply