மன்னாரில் காலநிலை தொடர்பான கலந்துரையாடல்

<!–

மன்னாரில் காலநிலை தொடர்பான கலந்துரையாடல் – Athavan News

மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் காலநிலை மற்றும் அபிவிருத்திகளால் ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (வியாழக்கிழமை) மன்னார் தனியார் விடுதியில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் விசேடமாக காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்த அபாயக் குறைப்புக்கான அபிவிருத்தி தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இக் கலந்துரையாடலில் விரிவுரையாளர்களாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா ,யாழ் பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் சங்கரப்பிள்ளை ரவி, யாழ் பல்கலைக்கழக நீர்பாசன பொறியியலாளர் ச.சர்வராஜா,மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


Leave a Reply